இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை
தாண்டி சென்று கொண்டே இருக்கிறது. அத்தனைப் பேருக்கும் உணவு அளிக்க
வேண்டிய விவசாயத்துறை குறைந்து கொண்டே போகிறது. விவசாயிகள் விவசாயத்தின்
மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள்
செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். பசுமை புரட்சி விவசாயத்தை
பசுமை ஒரு பெரும் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாக இருந்து வருகிறது.
விவசாயத்தை விட்டுவிட்டு கிராமமக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.
இப்படியே போனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள்
கிடைக்காது பஞ்சம் ஏற்படும் அபாயம்முள்ளது. அரசு விவசாயத் துறைக்கு
முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவேண்டும்.
தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர்.
இதில் நீர்பாசனவசதி இருப்பதாக கருதப்படுகிற நிலம் சுமார் 33 லட்சம்
ஹெக்டேர்தான். நீர்பாசன வசதியற்ற, வானம் பார்த்த பூமியாக இருக்கும்
நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேர்ராகும் ! அதாவது நாம் மொத்த
நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான்
விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து
கொண்டே போகிறது...! 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி...!.........?
-பசுமை நாயகன்.